நேற்று டாக்காவில் ஒரு தீவிரவாத தாக்குதல், இன்று இஸ்தான்புல். நாளை எங்கோ?. முதலில் பாரிஸ், பிறகு இஸ்தான்புல், இப்போது டாக்கா. இன்னும் நிறைய தாக்குதல்கள், மனித உயிர் பலிகள். என்னதான் வேண்டும் இந்த தீவிரவாதிகளுக்கு? இந்த தீவிரவாதிகளுக்கு யாரு தான் பணம் கொடுகின்றனர்? எங்கிருந்து ஆயுதங்கள் கிடைகின்றன?
முதலில் இஸ்லாம் அல்லது முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு ஒரு பரிமாணத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்கள் குரானில் இருந்து வேறு ஒரு மதத்தை உருவாக்கி உள்ளனர். ஆங்கிலத்தில் political ideology. அவர்கள் மதத்தை அரசியலிலும் மற்றும் இஸ்லாம் சம்மந்தமாக இல்லாத எந்த ஒரு பொருளும் அழிக்கப்பட வேண்டியவை என்று ஒரு பார்வை. இது எந்த ஒரு கடவுளும் கூறவில்லை எனபதே நிதர்சனம்.
இவர்களின் மனிதமும் மத பார்வைகள் வேறு. அவர்களை தீவிரவாதம் என்ற மதத்தை பின்பற்றி வருப்பவர்கள். அவர்களில் ஒரு தீவிரவாதியின் பதில், அவர்கள் தான் இஸ்லாம் மதத்தை கண்டுபித்தவர்கள், அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொல்லாம் என்று கூறினான். இப்படி ஒன்று குரானில் சொல்லவே இல்லை என்று கூறினார்கள் என் இஸ்லாமிய சகோதர்கள்.
தீவிரவாதிகளுக்கு அவ்ர்கள் போகுமிடம் எல்லாம் ஒரு மன்னன் போல ஆளவேண்டும். அவர்களின் உண்மையான் குறிக்கோள் இது தான். மக்கள் அவர்களின் அடிமையாக வாழவேண்டும். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. நீங்கள் மனிதர்களாக இருந்தாலே போதும் உங்கள் உயிரை அவ்ர்கள் எடுக்க. மதத்தை வைத்து மனிதர்களை ஒதுக்காதீர்கள்.
இன்னோரு தீவிரவாதம் உருவாகும் நாடு அமெரிக்கா. ஆனால் மக்களிடம் தீவிரவாதத்தை ஒழிக்க எல்லோரும் பாடுபட வேண்டும் என்று கதை சொல்லி. தீவிரவாதிகளுக்கு காசும், துப்பாக்கிகளும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மக்கள் யாரும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூற மறுக்கின்றன. அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஏமாற்றி ஒப்பந்தம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு மற்ற நாடுகளை அடக்கி கொண்டு ஒரு மறைமுக தீவிரவாதத்தை நடத்திக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , சீனா போன்ற நாடுகள் அமைதி வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மாதம் ஒரு முறை ஆயுத பயிற்சி நடக்கின்றது. குண்டு சோதனை நடக்கின்றது. இப்படி கூறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிவருகிறது. இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் என்று எல்லா மத நாடுகளும் மனிதர்களுக்கு எதிராகத்தான் உள்ளது. எந்த மதமும் மனிதர்களைக் கொல்ல சொல்லவில்லை. எந்த கடவுளும் சொல்லவில்லை.
மக்களோ பசி பட்னியில் சாகிறார்கள் அதை பற்றி கவலைப்பட ஒரு நாடும் இல்லை. இதில் இவர்கள் தீவிரவாதிகளை ஒடுக்கப் போகறார்களாம்.
மனிதர்களே மதத்தை கொல்கின்றன. மனிதர்களே மனிதனை கொல்கிறார்கள்.
மனிதர்களே மதத்தை கொல்கின்றன. மனிதர்களே மனிதனை கொல்கிறார்கள்.
தீவிரவாதிகளைவிட, மக்களை ஏமாற்றும் சில மனிதர்களை தான் உண்மையான தீவிரவதிகள்.
கடவுள்களின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த தீவிரவாதிகள்.
கடவுள்களின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த தீவிரவாதிகள்.
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, மனிதமும் கிடையாது.
~அனந்த் வீரா~