ஞாயிறு, 3 ஜூலை, 2016

தீவிரவாதியின் மதம் தீவிரவாதம்

நேற்று டாக்காவில் ஒரு தீவிரவாத தாக்குதல், இன்று இஸ்தான்புல். நாளை எங்கோ?. முதலில் பாரிஸ், பிறகு இஸ்தான்புல், இப்போது டாக்கா.  இன்னும் நிறைய தாக்குதல்கள், மனித உயிர் பலிகள். என்னதான் வேண்டும் இந்த தீவிரவாதிகளுக்கு?  இந்த தீவிரவாதிகளுக்கு யாரு தான் பணம் கொடுகின்றனர்? எங்கிருந்து ஆயுதங்கள் கிடைகின்றன?

முதலில் இஸ்லாம் அல்லது முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு ஒரு பரிமாணத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்கள் குரானில் இருந்து வேறு ஒரு மதத்தை உருவாக்கி உள்ளனர். ஆங்கிலத்தில் political ideology. அவர்கள் மதத்தை அரசியலிலும் மற்றும் இஸ்லாம் சம்மந்தமாக இல்லாத எந்த ஒரு பொருளும் அழிக்கப்பட வேண்டியவை என்று ஒரு பார்வை. இது எந்த ஒரு கடவுளும் கூறவில்லை எனபதே நிதர்சனம்.

இவர்களின் மனிதமும் மத பார்வைகள் வேறு. அவர்களை தீவிரவாதம் என்ற மதத்தை பின்பற்றி வருப்பவர்கள். அவர்களில் ஒரு தீவிரவாதியின் பதில், அவர்கள் தான் இஸ்லாம் மதத்தை கண்டுபித்தவர்கள், அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொல்லாம் என்று கூறினான்.  இப்படி ஒன்று குரானில் சொல்லவே இல்லை என்று கூறினார்கள் என் இஸ்லாமிய சகோதர்கள்.
தீவிரவாதிகளுக்கு அவ்ர்கள் போகுமிடம் எல்லாம் ஒரு மன்னன் போல ஆளவேண்டும். அவர்களின் உண்மையான் குறிக்கோள் இது தான். மக்கள் அவர்களின் அடிமையாக வாழவேண்டும். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. நீங்கள் மனிதர்களாக இருந்தாலே போதும் உங்கள் உயிரை அவ்ர்கள் எடுக்க. மதத்தை வைத்து மனிதர்களை ஒதுக்காதீர்கள்.

இன்னோரு தீவிரவாதம் உருவாகும் நாடு அமெரிக்கா. ஆனால் மக்களிடம் தீவிரவாதத்தை ஒழிக்க எல்லோரும் பாடுபட வேண்டும் என்று கதை சொல்லி. தீவிரவாதிகளுக்கு காசும், துப்பாக்கிகளும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.  ஆனால் மக்கள் யாரும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூற மறுக்கின்றன.  அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஏமாற்றி ஒப்பந்தம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு மற்ற நாடுகளை அடக்கி கொண்டு ஒரு மறைமுக தீவிரவாதத்தை நடத்திக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , சீனா போன்ற நாடுகள் அமைதி வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மாதம் ஒரு முறை ஆயுத பயிற்சி நடக்கின்றது. குண்டு சோதனை நடக்கின்றது. இப்படி கூறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிவருகிறது. இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் என்று எல்லா மத நாடுகளும் மனிதர்களுக்கு எதிராகத்தான் உள்ளது. எந்த மதமும் மனிதர்களைக் கொல்ல சொல்லவில்லை. எந்த கடவுளும் சொல்லவில்லை.
மக்களோ பசி பட்னியில் சாகிறார்கள் அதை பற்றி கவலைப்பட ஒரு நாடும் இல்லை. இதில் இவர்கள் தீவிரவாதிகளை ஒடுக்கப் போகறார்களாம்.
மனிதர்களே மதத்தை கொல்கின்றன. மனிதர்களே மனிதனை கொல்கிறார்கள்.

தீவிரவாதிகளைவிட, மக்களை ஏமாற்றும் சில மனிதர்களை தான் உண்மையான தீவிரவதிகள்.
கடவுள்களின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த தீவிரவாதிகள்.
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, மனிதமும் கிடையாது.

~அனந்த் வீரா~

சனி, 2 ஜூலை, 2016

அப்பாவும் நானும் மற்றும் என் நட்பும்

சற்றும் இந்த பெயரை பார்த்த பின்பு என்னால் என்னை கட்டுப்படுத்த இயலவில்லை. ஆம், அப்பா என்கிற பெயரை பார்த்த பின்பு, எதோ ஒன்று என்னை இந்த படம் பார்க்க வேண்டும் என்று சொன்னது.
நான் அப்பாவை மிகச்சரியாக அறியாதவன். என்னுள் ஏதோ ஒரு பேரலை. அவரோடு வாழ்ந்த சிறிய நாட்கள் ஞாபகம் வந்தது.  சமுத்திரக்கனியை  படத்தில் பார்க்கும் போது என் அப்பா இப்படி ஒரு மனிதராய் தான் இருந்திருக்கலாம். என் அம்மா கூறிய சில கருத்துக்கள் என் அப்பாவைப்பற்றி, சொன்னதை வைத்து, ஒரு கோடு போட்டு பார்த்ததில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று யூகிக்கமுடித்தது.

பள்ளிநாட்களில் இப்படி தான் என்று  வாழ்ந்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் பள்ளியில் இப்படியும் கற்று கொடுக்கலாம் அப்பா படம். வாழ்க்கையில் நண்பர்களை தேடியிருக்கிறேன். பள்ளியில் சில பேர் கல்லுரியில் சில பேர், வேலையில் சில பேர், வாழ்க்கையில் சில பேர் என்று ஒரு சிறிய வட்டம் எனது நண்பர்கள் குடும்பம்.

'ஏன் இந்த படம் எனக்கு பிடித்தது?' என்று கேள்வி. படத்தில் வந்த சில கட்சிகள் நான் எப்படி வளர்க்க ஆசைப்படுகிறேனோ அப்படி இருந்தது. மிக சரியான நட்பு வட்டாரம் வேண்டும் ஒருவன் நல்லவனாக வாழ. எனக்கும் அப்படி ஒரு குடும்பம்.

உணவை தேடி அலையும் போதுகூட, நான் என் நண்பர்கள் பிடியில் இருந்திருக்கிறேன். அவர்கள் சாப்பாட்டை கூட என்னை சாப்பிடவைத்து அழகு பார்த்த என் ஞாபகங்கள். என் அம்மாவிடம் நான் பேசியதை விட அவர்களிடம் பேசியது தான் அதிகம். சில நண்பர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் எப்போதும்.

படத்தை பத்தி எழுத ஆசைப்பட்டேன்.  ஆனால், சில நேரம் பிம்பத்தை விட நிஜத்தை பேச ஆசைப்பட்டேன்.  நான் நன்றி கூற ஆசைப்படுகிறேன் சமுத்திரக்கனிக்கு, எனக்கு சில நியபகங்களை குடுத்ததற்காக. என் நண்பர்களை பற்றியும் என் அப்பாவை பற்றியும் நினைவுடியதற்காக.
அப்பா என் கனவில் ஒருவர், நண்பர்.  நண்பர்கள் என் நிஜத்தில் அப்பாக்கள்.

~ஆனந்த் வீரா~

வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு சிறிய தூக்கம்

தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன கனவு. மதியம் ஒன் இந்தியா இணையத் தளத்தில் படித்த ஸ்வாதி இறப்பின் ஒரு பகிர்வு. அதை நேரில் கண்ட ஒரு மனிதரின் வாக்குமூலம். அவர் கூறிய சில தகவல்கள் என்னை எழுப்பியதா இல்லை, அங்கே மரணத்தின் ஓலம் என்னை எழுப்பியதா எனறு ஒரு யோசனை.
அவர் எப்பொழுதும் போல காலை 6.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வந்து அடைந்தார். என்றும் போல் ரயில் வருவதுக்கான நேரம். திடீர் என்று சதக் சதக் என்று ரெண்டு சத்தம். ஒரு பெண்ணின் மரண ஓலம். அதிர்ச்சி, அங்கு இருந்த எல்லா மக்களுக்கும். மூன்று நிமிடம் அவள் துடித்தாள். பிறகு பக்கத்தில் நின்ற ஒரு பெண் "அவ்வளவுதான்" என்ற சொல் மட்டும் கேட்டது அவர் காதுகளில்.
ஒரு பெண்ணின் கனவுகள், அவள் குடுபத்தின் கனவுகள் மறைந்தது அந்த மூன்று நிமிடங்களில். சட்டென்று என் தூக்கத்தை எழுப்பியது அவளின் சத்தமா இல்லை வேறு யாருக்கும் நடந்துவிடுமோ என்ற பயமா, தெரிய வில்லை.
எனது பெண் நண்பர்களிடம் ஸ்வாதியின் இறப்பு பற்றி கேட்டபோது. அவர்களிடம் கோபத்தை விட பயம் மட்டுமே நான் அறிந்தது.
இந்த பயத்தை போக்க கபாலி ரஜினி வருவாரா இல்லை விஜய் அல்லது அஜித் வருவார்களா என்று தெரிய வில்லை. ஒன்று ஸ்வாதி மரண ஓலம் மக்கள் வெகு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.
~ ஆனந்த் வீரா ~

முடியைக் கட்டி ஒரு மலை இழுத்தல்

ணக்கம். நண்பர்கள் கூட்டாக இணைந்து கட்டுரைத் தொகுப்பு போல இணையத்தில் எழுதத் திட்டம். இது ஒரு சிறிய முயற்சி. கூட்டாக எழுதுவதில் சிக்கல் எதுவும் இருக்காதென நினைக்கிறேன். வெளி ஆட்கள் படிக்கவிட்டாலும், இதை இதில் எழுதும் குழுவினரின் உரையாடல் களமாக வைத்துக் கொள்ளலாம்.

அனுபவம், இலக்கியம், புத்தக விமர்சனம், திரைப்படம், ஆளுமைகளின் தாக்கம், கடவுள், தல வரலாறு / தகவல்கள், அரசியல், மற்றும் இன்ன பிற அனைத்து தளங்களிலுமான ஒரு கலந்துரையாடல் களமாக இதை வைத்துக் கொள்ளலாம். கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்ற எந்த வடிவ இலக்கியம் சார்ந்த படைப்புகளும் இடம்பெற வைக்கலாம் என்று திட்டம்.

இப்போதைக்கு நாங்கள் மூவர் இருக்கிறோம், .ரஞ்சித் குமார், வீ. ஆனந்த்ராஜ், மற்றும் ஜே. இன்பென்ட் அலோசியஸ்.


முதல் அடிதான். வைத்துத் தான் பார்ப்போமே.  ;)