செவ்வாய், 8 நவம்பர், 2016

கற்பனை

ஒரு அழுகையுடன் ஒருவரின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஒரு புத்தகத்தில் படித்தது போல, நாம் பிறந்தவுடன் இறப்பை தேடி போகிறோம் அதுதான் வாழ்க்கை. வெற்றி, தோல்வி, அழுகை, சிரிப்பு எல்லாம் ஒரு அங்கம் தான். நாம் இறப்பை தேடிய பயணம் நாம் சந்திக்கும் ஒரு ஒரு தருணங்கள் எல்லாம் ஒருவரின் வாழ்க்கை சுவாரஸ்யங்கள். பிறந்தவுடன் சுதந்திரம் பிறகு மெல்ல மெல்ல தானாக மறைந்து போகும். கண்ணீருடன் சிந்திய பிறந்தநாள் நம் நாம் பெற்றோர்களுக்கு ஒரு அழகான ஒரு கற்பனை. பிறந்தவுடன் அம்மாவின் ஒரு கற்பனை, அப்பாவிற்கு ஒரு கற்பனை, ஏன் சொந்தங்களுக்கு ஒரு கற்பனை பிறந்திருக்கும் குழந்தைக்கு வரப்போகும் வாழ்க்கையில் ஒரு  கற்பனை.இதில் எதோ ஒன்று தான் வெற்றி பயணத்தில் செல்லும், முடித்த அளவு அந்த குழந்தையின் கற்பனை இறந்து போகும். நாம் முதல் இறப்பை தேடிய பயணத்தின் வெற்றி. நம் முதல் வெற்றியும் கூட இதுதான். முதலில் தவள்வது, பிறகு நடப்பது, ஓடுவது என்று வாழ்க்கை விறு விருவென ஓடுகிறது. படிக்கும் போது ஏன் என்று கேள்வி நம்மை மிகவும் கவர்ந்த வார்த்தை. ஒருவனின் தேடல் கூட இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. தேடலில் இரண்டு வகை, ஒரு வகை தேடி சாதிப்பது, இனொன்று தேடியவனிடம் இருந்து கற்றுக்கொள்வது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நம் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் டெஸ்லா. முதல் வகை டெஸ்லா தேடி கண்டுபிடிப்பார், எடிசன் இரண்டாம் வகை. வெற்றி எடிசன் தான் ஆனால் இதில் எதை கற்று கொள்வது பெற்றோரிடம் இருந்து வருகிறது. நம் அனைவரின் வெற்றி நம் கற்பனையை அடைவது தான். அதில் முதல் வெற்றி ஒரு சிறந்த ஆசிரியர் கிடைப்பது. நீங்கள் ஜாக்கி சான் ஆவதும், ப்ரஸ் லீ ஆவதும் ஒரு ஆசிரியர் கையில். ப்ரஸ் லீ தனி திறமை , தனி சண்டை கலை, தானே கற்று கொண்டார். ஜாக்கி சான் கற்று கொண்டார் சண்டை கலை நல்ல ஆசிரியரிடம் இருந்து.

இப்படி வெற்றிகளுக்கு தேடி செல்லும் வழியில், நாம் முதலில் சாதிப்பது சாதியும், மதமும். எதோ ஒன்றிற்கு அடிமை ஆகவில்லை எனில் வாழ்க்கை சிறந்ததாக அமையாது. இது என் கருத்து. உண்மை இல்லை ஆனால் பொய்யும் இல்லை. ஒரு கிராமம் விட்டு இன்னோரு கிராமம் சென்றவுடன் கேட்கப்படும் கேள்வி நீ எந்த சாதியை சேர்ந்தவர். ஒரு நகரத்தில் இருந்து இன்னோரு நகரம் சென்றவுடன் கேட்கப்படும் கேள்வி எந்த மதம் என்று இரண்டும் சுதந்திரத்தின் முடிய கதவு. இந்த ஒன்றில் சிக்கிய பின்பு நம் வாழ்க்கை சீனா பெருணசுவர் போல நீண்டு கொண்டே போகும் அவ்வப்போது சிறு ஜன்னல்வுடன் இரு பக்கமும் சுவருடன். இதை தண்டி நம் இறப்பை தேடும் போது நாம் பார்ப்பது நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள்.  நண்பர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் உங்கள் இலக்கை நீங்கள் அடைய. உங்கள் வாழ்க்கையின் நீண்ட பயணிகள் இவர்கள். நீங்கள் துரோகங்களை எதிர் பார்க்காமல் வாழ்ந்தால் நீங்கள் மனிதன், அதை எதிர் பார்த்து வாழ்ந்தால் நியானி. அதற்கு எடுத்துக்காட்டு சொல்லிக்கொண்டே போகலாம் பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஒரு பெரிய வரலாறு உண்டு, இவர்கள் நல்ல துரோகிகள். ஒரு நல்ல நண்பன் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் இதில் சந்தோஷம், துக்கம், கருத்துகள் பரிமாற்றம், துரோகம் எல்லாம் அடங்கும்.

உண் சுதந்திரம் வேண்டும் என்று உணர்வதுக்கு நமக்கு வருடங்கள் ஆகிறது. அதிலும் நம் முதல் சுதந்திர கண்டுபிடிப்பு ன் நண்பன் வீட்டில் அவன் எங்கு வேணா செல்லலாம் , என்ன வேணா செய்யலாம் ஆனால் என்னால் ஏதும் செய்யமுடிய வில்லை. பிறகு அது சுதந்திரம் இல்லை என்று தோன்றும். தப்பு செய்யாதே என்று கூறும் ஆசிரியர் , சாலை விதிகளை பற்றி இரண்டு நாள் வகுப்பு எடுக்கும் அவர் , ஒருநாள் கூட அதை மதித்தது இல்லை. படிக்கும் போது லஞ்சம் தப்பு அதை யாரும் கொடுக்க கூடாது என்று சொல்லும் அப்பா , ஒருநாள் போலீஸில் இரனுர் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். லஞ்சம் வாங்க கூடாது என்று கூறிய அரசு அதிகாரி அன்று வாங்கினார், தப்பு செய்ய கூடாது என்று இருந்த என் கற்பனை இறந்த இனொருநாள். இப்படி இன்னோரு கற்பனை இறந்த தருணம் என் நண்பன் ஒரு பெண்ணாய் தவறாக பேசி அவளை பற்றி அவதூறாக எல்லோரிடமும் சொல்லி வந்தான். இனொருநாள் இரவு ஒரு பையன் தன் தங்கையை தப்பாக பேசினான் என்று கோவப்படு அடிக்குறான். நியாயங்கள் ஆயிரம் அவர் அவருக்கு. பெண் சுதந்திரம் வேண்டும் என்று கேள்வி பட்ட கற்பனை, ஒரு பெண் எப்போது வேண்டுமானலும் அவள் பிடித்ததை செய்ய வேண்டும், அவள் முடிவை அவள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இன்னோரு பெண், ஒரு ஆண் மது அருந்திகிறான், நானும் அருந்துவேன், ஒரு ஆணின் தப்பை பெண் செய்தால் அது சுதந்திரம் என்று கூறினாள், அப்போது தேவை இல்லை இந்த சுதந்திரம் ஆணுக்கு கூட என்று தகர்த்து என் கற்பனை.

இப்படி அடுக்கிக்கொண்டே சொல்லவேண்டும் கற்பனைகளை, ஆனால் எல்லாம் ஒரு நொடிக்குள் முடித்து இறந்துவிடும். நான் என் வீட்டிற்க்கு பயணம் செய்து கொண்டு இருந்தேன். அன்று சற்றும் அதிர்ச்சியாக ஆம்புலன்ஸ் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது. எல்லாருக்கும் புரிந்தது எதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது என்று. பேருந்து செல்ல செல்ல கற்பனைகள் துவங்கின, ஒருவர் ஒரு பேருந்து மற்றும் லாரி மோதியது அந்த பஸ் கவுந்துவிட்டது அதனால் தான் இத்தனை ஆம்புலன்ஸ் என்று கூறினார். சற்று தூரம் சென்ற விடன் பின்னே இருந்த அம்மாக்கள் அம இந்த லாரி ஓட்டுநர்கள் இப்படி தான் வேகமாக ஓடுவார்கள். எப்போதும் மது அருந்திவிட்டு இருப்பார்கள் என்று ஒரு கற்பனை, பிறகு இனொருவர் எவன் செத்த நமக்கு என்ன அம்மா(முதலமைச்சர்) வாழ்க அம்மா இப்படி அவங்க மருத்துவமனையில் இருக்கிறது நல்லாத்தான் இப்படிலாம் நடக்குது என்று சத்தமாக கூறினார். பேருந்து மெதுவாக அந்த இடத்தை கடந்தது, ஒரு கார் மற்றும் ஒரு பைக் மோதியது, கார் தடும் மாரி கிலே இருக்கும் பள்ளம் ஒன்றில் சிறக்கிக்கொண்டது. பேருந்து சற்று வேகமாக சென்றவிடன் எல்லோரு கற்பனை இறந்தது.

கற்பனையில் உலகம் அதில் நாமும் ஒரு கற்பனை.

~மகிழ்ச்சி~
~ ஆனந்த் வீரா ~