வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு சிறிய தூக்கம்

தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன கனவு. மதியம் ஒன் இந்தியா இணையத் தளத்தில் படித்த ஸ்வாதி இறப்பின் ஒரு பகிர்வு. அதை நேரில் கண்ட ஒரு மனிதரின் வாக்குமூலம். அவர் கூறிய சில தகவல்கள் என்னை எழுப்பியதா இல்லை, அங்கே மரணத்தின் ஓலம் என்னை எழுப்பியதா எனறு ஒரு யோசனை.
அவர் எப்பொழுதும் போல காலை 6.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வந்து அடைந்தார். என்றும் போல் ரயில் வருவதுக்கான நேரம். திடீர் என்று சதக் சதக் என்று ரெண்டு சத்தம். ஒரு பெண்ணின் மரண ஓலம். அதிர்ச்சி, அங்கு இருந்த எல்லா மக்களுக்கும். மூன்று நிமிடம் அவள் துடித்தாள். பிறகு பக்கத்தில் நின்ற ஒரு பெண் "அவ்வளவுதான்" என்ற சொல் மட்டும் கேட்டது அவர் காதுகளில்.
ஒரு பெண்ணின் கனவுகள், அவள் குடுபத்தின் கனவுகள் மறைந்தது அந்த மூன்று நிமிடங்களில். சட்டென்று என் தூக்கத்தை எழுப்பியது அவளின் சத்தமா இல்லை வேறு யாருக்கும் நடந்துவிடுமோ என்ற பயமா, தெரிய வில்லை.
எனது பெண் நண்பர்களிடம் ஸ்வாதியின் இறப்பு பற்றி கேட்டபோது. அவர்களிடம் கோபத்தை விட பயம் மட்டுமே நான் அறிந்தது.
இந்த பயத்தை போக்க கபாலி ரஜினி வருவாரா இல்லை விஜய் அல்லது அஜித் வருவார்களா என்று தெரிய வில்லை. ஒன்று ஸ்வாதி மரண ஓலம் மக்கள் வெகு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.
~ ஆனந்த் வீரா ~

3 கருத்துகள்:

  1. கண்டும் காணாமல் போவது தான் வீரம் இப்பொழுது

    பதிலளிநீக்கு
  2. Idhu nijam, enakum kovathai vida bayame niraindhu irukukirathu ,en seiya mudium ennal? kaaranam , naan oru PEN,
    mudhal muraiyaaga varundhuguren PENNAI pirandhadharku :(

    பதிலளிநீக்கு