சனி, 2 ஜூலை, 2016

அப்பாவும் நானும் மற்றும் என் நட்பும்

சற்றும் இந்த பெயரை பார்த்த பின்பு என்னால் என்னை கட்டுப்படுத்த இயலவில்லை. ஆம், அப்பா என்கிற பெயரை பார்த்த பின்பு, எதோ ஒன்று என்னை இந்த படம் பார்க்க வேண்டும் என்று சொன்னது.
நான் அப்பாவை மிகச்சரியாக அறியாதவன். என்னுள் ஏதோ ஒரு பேரலை. அவரோடு வாழ்ந்த சிறிய நாட்கள் ஞாபகம் வந்தது.  சமுத்திரக்கனியை  படத்தில் பார்க்கும் போது என் அப்பா இப்படி ஒரு மனிதராய் தான் இருந்திருக்கலாம். என் அம்மா கூறிய சில கருத்துக்கள் என் அப்பாவைப்பற்றி, சொன்னதை வைத்து, ஒரு கோடு போட்டு பார்த்ததில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று யூகிக்கமுடித்தது.

பள்ளிநாட்களில் இப்படி தான் என்று  வாழ்ந்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் பள்ளியில் இப்படியும் கற்று கொடுக்கலாம் அப்பா படம். வாழ்க்கையில் நண்பர்களை தேடியிருக்கிறேன். பள்ளியில் சில பேர் கல்லுரியில் சில பேர், வேலையில் சில பேர், வாழ்க்கையில் சில பேர் என்று ஒரு சிறிய வட்டம் எனது நண்பர்கள் குடும்பம்.

'ஏன் இந்த படம் எனக்கு பிடித்தது?' என்று கேள்வி. படத்தில் வந்த சில கட்சிகள் நான் எப்படி வளர்க்க ஆசைப்படுகிறேனோ அப்படி இருந்தது. மிக சரியான நட்பு வட்டாரம் வேண்டும் ஒருவன் நல்லவனாக வாழ. எனக்கும் அப்படி ஒரு குடும்பம்.

உணவை தேடி அலையும் போதுகூட, நான் என் நண்பர்கள் பிடியில் இருந்திருக்கிறேன். அவர்கள் சாப்பாட்டை கூட என்னை சாப்பிடவைத்து அழகு பார்த்த என் ஞாபகங்கள். என் அம்மாவிடம் நான் பேசியதை விட அவர்களிடம் பேசியது தான் அதிகம். சில நண்பர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் எப்போதும்.

படத்தை பத்தி எழுத ஆசைப்பட்டேன்.  ஆனால், சில நேரம் பிம்பத்தை விட நிஜத்தை பேச ஆசைப்பட்டேன்.  நான் நன்றி கூற ஆசைப்படுகிறேன் சமுத்திரக்கனிக்கு, எனக்கு சில நியபகங்களை குடுத்ததற்காக. என் நண்பர்களை பற்றியும் என் அப்பாவை பற்றியும் நினைவுடியதற்காக.
அப்பா என் கனவில் ஒருவர், நண்பர்.  நண்பர்கள் என் நிஜத்தில் அப்பாக்கள்.

~ஆனந்த் வீரா~

2 கருத்துகள்:

  1. அப்பா நம் கனவுகளுக்கு உயிர் அளிக்க தியாகம் செய்யும் கரடு முரடான தாய்.

    பதிலளிநீக்கு
  2. Yes Anna, really its true, friends are our next family members,
    Anyway dad will always be blessing u from heaven where he went to find peace :)

    பதிலளிநீக்கு